இளையோர் வார விழா 20,01,2017

பந்தலூர் அ|ருகே தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இந்தியஅரசு நேருயுவகேந்திரா நீலகிரி பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இளையோர் வார விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உதயகுமார் தலைமை தாங்கினார்.  ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் பேசும்போது  இளைஞர்கள் மன உறுதியோடு செயல்பட வேண்டும், தற்போது அதிகரித்து வரும் தவறான பழக்கங்களில் அடிமையாகாமல் நல்வழியில் வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.  தினசரி நிகழ்வுகளை அறிந்து கொள்ள பத்திரிக்கை படிக்க வேண்டும் என்றார்.

தேவாலா அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சமுத்திரபாண்டியன் பேசும்போது விவேகானந்தர் துறவு மேற்கொண்டாலும் நாட்டின் மீதும் இளைஞர்கள் மீதும் பற்று கொண்டிருந்தார்.  அவர் இளைஞர்களை ஒருங்கிணைத்து அவர்கள் முயற்சியினால்  சமுதாய மாற்றம் வரவேண்டும் என்ற விரும்பியது இன்று நடைபெறுகின்றது.  இளைஞர்கள் நாட்டு பற்று சமுதாய பங்களிப்புடன்  செயல்படவேண்டும் என்றார்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்  சத்தியநேசன் பேசும்போது இளைஞர்கள் தங்கள் திறன்களை அறிந்து கொள்ளுதல் அவசியம்.  திறமைகளை அறிந்து அதனை எட்டும் வழிகளை அறிந்து அதனை பின்பற்றினால் வாழ்வில் வெற்றி பெறலாம்.   மாற்றத்திற்கான முயற்சியை இளைஞர்கள் மேற்க்கொள்ள வேண்டும் என்றார்.

கூடலூர் கல்லூரி நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் மகேஸ் பேசும்போது இளைஞர்கள் மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.  இளைஞர்கள் தவறான வழிகளை விடுத்து பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்கள் இருப்பதை உணர்ந்து மனஉறுதியோடு வாழ பழகவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 














No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...