பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013

 *#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013*

*#பாலியல்_வன்முறை_தடுப்பு*

இந்தியாவில் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 நிறைவேற்றப்பட்டது.

*#பின்னணி*

1997-ம் ஆண்டில் விசாகா வழக்கு விசாரணையின்போது உச்சநீதிமன்றமானது பணியிடத்தில் பாலியல் வன்முறை என்பது மனித உரிமைமீறல் நடவடிக்கையாகும் என்பதனை முதல் முறையாக ஏற்றுக் கொண்டது. 

இவ்வழக்கில் தனது தீர்ப்பினை அளிக்கும்போது பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் அளித்தது.

இதுதொடர்பான சட்டம் இயற்றப்படும் வரை இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் இந்தவழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப் படுவதனைக் கட்டாயம் ஆக்கியது. இதனடிப்படையில்தான் பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் எழுந்தது.

*#சட்டத்தின்_அம்சங்கள்*

விசாகா வழக்கில் நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலானது, நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்துவதாக இருந்தது. ஆனால், பணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டமானது , அலுவலகங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி, கட்டிடத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழிலாளர்கள், தற்காலிக அல்லது ஒப்பந்தத் தொழிலாளர்கள், தினக்கூலி அல்லது பயிற்சி அல்லது அப்ரெண்டிஸ் அடிப்படையில் வேலை செய்பவர்கள், ஊதியம் பெற்றோ அல்லது பெறாமலோ பணிபுரிபவர், தன்னார்வ அடிப்படையில் பணிபுரிபவர் என அனைத்து பெண் தொழிலாளர்களுக்கும் பணியிடத்தில் பாதுகாப்பு அளிப்பதாக உள்ளது.

இச்சட்டத்தின்படி, 10 பேருக்கு மேல் பெண்களை பணியிலமர்த்தி உள்ள எந்தவொரு நிறுவனமும் அலுவலக அளவிலான புகார் குழு ஒன்றை அமைத்திட வேண்டும். இக்குழுவின் தலைவராக அந்நிறுவனத்தில் உயர்நிலை பொறுப்பில் பணிபுரியும் பெண் ஒருவர் இருக்க வேண்டும். 

பெண்களின் நலனில் அக்கறையோடு அல்லது சமூக செயல்பாட்டில் அக்கறையோடு அல்லது சட்ட அறிவு கொண்ட சக பெண் ஊழியர் இருவர் உறுப்பினராக இருப்பதுடன், பெண்களின் மேம்பாட்டில் ஈடுபடும் அல்லது பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்குகளில் தலையீடு செய்யும் அனுபவம் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரும் இக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். 

பணியிடத்தில் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்த புகாரினை நிறுவன அளவிலான அல்லது இட அளவிலான புகார் குழுவிடம் அளித்திடலாம். 

பாலியல் துன்புறுத்தல் சம்பவம் நடந்து 3 மாதங்களில் எழுத்துப்பூர்வமான புகாரினை அளித்திட வேண்டும். 

உடல் அல்லது உளரீதியான பாதிப்பின் காரணமாக இறப்பு அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் பாதிக்கப்பட்ட பெண்ணால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க இயலவில்லை எனில் அவளது சட்டப்பூர்வமான வாக்ச்சுதாரரோ அல்லது வேறு எவரேனுமோ புகாரினை பதிவு செய்திடலாம். 

பாதிப்பிற்காளான பெண் விரும்பினால் புகார் குழுவானது விசாரணை மேற்கொள்வதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சியினை மேற்கொள்ளலாம். பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட தீர்வு அமலாகாதபோது புகார் குழு தனது விசாரணையைத் துவக்கிடலாம். 

புகாரினை விசாரித்திடும் இக்குழுவானது, குற்றம் உண்மையெனில் ஊழியரின் தவறுக்கேற்ப எச்சரிப்பது அல்லது அலுவலகம் சார்ந்த நடவடிக்கை மேற்கொள்வது அல்லது காவல்துறையிடம் வழக்கை ஒப்படைப்பது என்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். 

விசாரணை நடைபெறும் காலத்தில் பாதிக்கப்பட்ட பெண் எழுத்துமூலம் கோரினால் அப்பெண்ணையோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவரையோ இடமாற்றம் செய்திடலாம். 

ஏற்கனவே உள்ள விடுப்புடன் 3 மாத காலம் வரையிலான சிறப்பு விடுப்பு பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அளித்திடலாம். பொதுவாக விசாரணை என்பது 90 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். 

விசாரணை நடத்தப்பட்டு முடிந்தவுடன் 10 நாட்களுக்குள் புகார் குழுவானது தனது அறிக்கையை அளித்திட வேண்டும். 

இந்த அறிக்கையின் அடிப்படையில் 60 நாட்களுக்குள் முதலாளி அல்லது நிறுவனர் அல்லது மாவட்ட அதிகாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து புகார் குழுவிற்கும் தெரிவிக்க வேண்டும்.

*#எவை_பாலியல்_வன்முறை*

விசாகா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதலில் பாலியல் வன்முறை என்பது வரையறை செய்யப்பட்டிருந்தது. இதனை ஒட்டியே, இச் சட்டத்திலும் பாலியல் வன்முறை என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, 

பாலியல் துன்புறுத்தல் என்பதில் தொடுதல் அல்லது தொட முயற்சித்தல், பாலியல் ரீதியான விஷயங்களைக் கோருதல் அல்லது வலியுறுத்தல், பாலியல் தொனியில் பேசுதல், ஆபாச படங்களைக் காட்டுதல், இதர விரும்பத்தகாத பாலியல் தன்மையுடன் கூடிய உடல் ரீதியான அல்லது வார்த்தைகள், சைகைகள் கொண்ட நடத்தை போன்றவை அடங்கும்.

*#முதலாளி_அல்லது_நிர்வாகத்தின்_கடமைகள்*

பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வதுடன் வேலையிடத்திற்கு வரும் நபர்களிடமிருந்தும் பாதுகாப்பளிப்பது முதலாளி அல்லது நிர்வாகத்தின் கடமையாகும். 

மேலும், அந்நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புகார் குழு மற்றும் தண்டனை குறித்த விவரங்களை அனைவரின் பார்வைக்கும் உரிய இடத்தில் காட்சிப் படுத்திட வேண்டும். இது மட்டுமின்றி, இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கூட்டங்களை நடத்திட வேண்டும். புகார்க் குழுவின் செயல்பாட்டிற்கு உகந்த சூழலை உருவாக்கிட வேண்டும்

*#அபராதம்*

இச்சட்டம் கறாராக அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதால்தான் புகார் குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலோ அல்லது சட்டத்தின் விதிமுறைகளை மீறினாலோ ரூ.50000 வரை அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழி வகை செய்துள்ளது.

தகவல்

#வழக்கறிஞர்_D_தங்கத்துரை@#ஹரி**


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்நீலகிரி மாவட்டம்

குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு* *தண்டனைகள் உண்டா

*தினம் ஒரு சட்டம் கற்றுக் கொள்ளுங்கள் அது உங்களை தலை நிமிர்ந்து வாழ செய்யும்..*

*குற்றம் செய்யும் குழந்தைகளுக்கு* *தண்டனைகள் உண்டா*

ஒரு குற்றம் நடைபெற்று அந்த குற்றத்தின் விசாரணையில்  ஒரு குழந்தை தான் அந்த குற்றச் செயலை செய்தது என்றால் இந்திய தண்டனைச் சட்டத்தின்படி அந்த குழந்தைக்கு தண்டனை வழங்க முடியுமா அந்த குழந்தைக்கு தண்டனை உண்டா என்ற கேள்விக்கு இந்த கட்டுரையில் பதிலை தெரிந்து கொள்வோம்.

குழந்தைகள் செய்யும் குற்றம் குற்றமாக கருதப்படுமா?

குழந்தைகள் குற்றம் செய்தால் குற்றவாளியா?

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82 & 83

குழந்தைகள் செய்யும் குற்றம் குற்றமாக கருதப்படுமா?

இந்திய தண்டனைச் சட்டத்தின் படி 7 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எவ்விதக் குற்றத்திற்கும் ஆளாவதில்லை. ஏனெனில் அவ்வயதுடைய குழந்தைகள் குற்றச் செயல் செய்ய இயலாத சூழலில் இருப்பதாக சட்டம் அனுமானிக்கிறது. அதாவது ஒரு குற்றம் செய்யப்பட்டது என்றால் அந்த குற்றத்திற்கு பின்னால் இருக்கும் நோக்கத்தை தான் குற்றமாக சட்டம் கூறுகிறது இதை குற்றச்செயல் நோக்கம் இயலாமை எனப்படுகிறது.

*குழந்தைகள் குற்றம் செய்தால்* *குற்றவாளியா*

 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குற்றம் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது என்று இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82 மற்றும் 83 சட்டம் விளக்குகிறது. அதை தெளிவாக தெரிந்து கொள்வோம்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 82 மற்றும் பிரிவு 83 பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டால் தான் எந்த வயதுடைய குழந்தைகளுக்கு தண்டனை வழங்க முடியும் குழந்தைகள் செய்த குற்றத்திற்கு தண்டனை உண்டா என்பதை விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 82.

7 வயதுக்குட்பட்ட குழந்தை எந்த காரியத்தை செய்தாலும் அது குற்றம் ஆகாது.

 ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையின் செயல்.-ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையால் எதுவும் குற்றம் இல்லை.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 83.

ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முதிர்ச்சியற்ற புரிதல். ஏழு வயதுக்கு மேற்பட்ட மற்றும் பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தையால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் நடத்தையின் தன்மை மற்றும் விளைவுகளைத் தீர்மானிக்க போதுமான புரிதல் முதிர்ச்சியை அடையாத குழந்தையால் எதுவும் குற்றமாகாது.

ஒரு செய்கையை செய்யும் பொழுது தனது நடத்தையின் தன்மையையும் அதன் விளைவுகளையும் ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கு போதுமான மனப்பக்குவம் அடைந்திராத 7 வயதிற்கு மேற்பட்ட ஆனால் 12 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையின் செயல் எதுவும் ஒரு குற்றம் ஆகாது. இங்கு செயலின் தன்மை மற்றும் விளைவை அறிந்து கொள்ளும் பக்குவம் அடைந்திருப்பின் குற்றப் பொறுப்பு உண்டு.

12 வயதிற்கு மேல் குற்றப் பொறுப்பு உண்டு.


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

*பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியனவ*

 *பாகப்பிரிவினை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியனவ*

*தந்தை வழி சொத்தில் வாரிசுகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமைதான் பாகப்பிரிவினை*.

அதாவது, குடும்பச் சொத்து உடன்படிக்கை பத்திரம். குடும்ப உறுப்பினர்கள் சம்மதத்தின்பேரில் சமமாகவோ அல்லது வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பிரித்துக் கொள்ள முடியும்.

பூர்வீகச் சொத்துக்களை வாரிசுகளுக்கு சமமாகப் பிரிக்கப்படாதபட்சத்தில் அல்லது அவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஆட்சேபனை இருந்தால் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.

ஒருவருக்கு நான்கு வாரிசுகள் இருந்து, அதில் மூன்று வாரிசுகளுக்கு மட்டும் பாகம் பிரிக்கப்பட்டு, ஒரு வாரிசுக்கு மட்டும் பாகம் கிடைக்கபெறாமல் இருந்தால், 

அந்தப் பாகப்பிரிவினை செல்லாது என அவர் நீதிமன்றத்தை நாடலாம். பாக பிரிவினை பதிந்திருந்தால் பின்னால் பிரச்சினை ஏற்படாது.

தான பத்திரம்..!

சொத்து உரிமை மாற்றம் செய்து தருவதில் உள்ள ஒருமுறை, தான பத்திரம் மூலம் வழங்குவது. குறிப்பாக, நெருங்கிய குடும்ப உறவுகளுக்குள் சொத்து உரிமை மாற்றம் செய்துகொள்ளும்போது இந்த முறையைக் கையாளலாம்.

ஒருவர் மற்றொருவரிடமிருந்து பண பலன்களை பெற்றுக்கொண்டு சொத்து உரிமை மாற்றம் செய்கிறபோது, அதை சொத்து விற்பனை என்று குறிப்பிடுகிறோம். இதுவே, தான பத்திரம் மூலம் மாற்றும்போது விற்பனை என்று ஆகாது.

அதாவது, சகோதரர் தனது சகோதரிக்கு சொத்தை தானமாக வழங்கலாம். சொத்தை தானமாக வாங்கியவர் அதை தனது கணவருக்கு தானமாகக் கொடுக்கலாம். இப்படி செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ளலாம்.

ஆனால், தான பத்திரம் பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய். இதுதவிர, பதிவு கட்டணம் இரண்டாயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தானம் கொடுப்பதை, தானம் வாங்குபவர் ஏற்று கொண்டு, அந்த இடத்தின் சுவாதீனத்தை, உடனடியாக அடைய வேண்டும்.

அந்த இடத்தின் மீதான வருவாய் ஆவணங்கள், பிற ஆவணங்களை உடனடியாக தானம் வாங்குபவர் தனது பெயருக்கு மாற்ற வேண்டும். தானம் ரத்து செய்ய இயலாத ஒன்று.

உயில்..!

இது விருப்ப ஆவணம்; சொத்தை தனிப்பட்ட முறையில், தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு எழுதித்தரும் முறைதான் உயில் எனப்படும். ஒருவர், தான் சம்பாதித்த தனிப்பட்ட சொத்துக்களை தனது இறப்புக்குப் பிறகு, 

தான் விரும்பும் நபருக்கு சிக்கல் இல்லாமல் போய்சேர வேண்டும் என்பதற்காக தனது சுயநினைவோடு எழுதித் தருவது. ஆனால், பூர்வீகச் சொத்தை உயிலாக எழுத முடியாது.

தனிப்பட்ட சொத்தை தனது வாரிசுகளுக்குத் தான் உயில் எழுதவேண்டும் என்கிற கட்டாய மில்லை. ரத்த உறவு அல்லாத மூன்றாம் நபர்களுக்கோ, அறக்கட்டளைகளுக்கோ உயிலாக எழுதித் தரமுடியும். அதேநேரத்தில், உயில் எழுதி வைக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு சொத்து சேர்ந்துவிடும்.

மனநிலை சரியில்லாத நிலையில் அல்லது குடிபோதையில் எழுதப்பட்ட உயில் செல்லாது. மேலும், மைனர் மீது உயில் எழுதப்படுமாயின் அதற்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

வாரிசுச் சான்றிதழ்..!

வங்கி வைப்புநிதி, பங்குச் சந்தை முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்திருந்து எதிர்பாராமல் இறக்கும் பட்சத்தில் நாமினிகளிடத்தில் இந்த சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். 

ஆனால், நாமினி இல்லாதபட்சத்திலோ அல்லது நாமினி மீது வாரிசுகள் ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்திலோ வாரிசுச் சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெறலாம்.

ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட வாரிசுகள் இருக்கும்பட்சத்தில் நீதிமன்றம் வழங்கும் இறங்குரிமை சான்றிதழ் அடிப்படையில் சொத்துக்கள் ஒப்படைக்கப்படும். ஒருவர் இரு திருமணம் செய்திருந்தால், அவரது இரு மனைவி குழந்தைகள், முதல் மனைவி ஆகியோர் வாரிசுகள் ஆவர்.

பொதுவாக, சொத்து பாகம் பிரிக்கும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளிடமும் சம்மதம் பெறவேண்டும். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு பிரிக்கப்படும் பாகப்பிரிவினை செல்லாது. 

நீதிமன்றத்தில் இதை மறைத்து தீர்வு பெறப்பட்டிருந்தால், பின்னாட்களில் இது தெரியவரும்போது அந்த தீர்வு ரத்து செய்யப்படும்.

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணத்தை இந்து திருமணச் சட்டம் அங்கீகரிக்கவில்லை. இதனால் இரண்டாவது மனைவிக்கு கணவனது சொத்தில் உரிமையில்லை. ஆனால், அவர் வசமிருக்கும் தனிப்பட்ட சொத்தில் உரிமை கோரமுடியும்”

பொதுவாக, சொத்து பாகப்பிரிவினையில் இதுபோன்று பல அடிப்படை விஷயங்களை கவனித்தாலே சிக்கலில்லாமல் உறவுகளை கையாள முடியும். வழக்கு நீதிமன்றம் என இழுத்தடிப்புகள் இல்லாமல் சொத்துக்களை பரிமாற்றம் செய்துகொள்ளலாம்

*தனியொருவரே ஒரு சொத்தை வைத்திருந்தாலோ, வாங்கியிருந்தாலோ அந்த சொத்துக்கு பாகப்பிரிவினை என்னும் பிரச்சனை இல்லை. 

கூட்டாக வாங்கியிருந்தால் (இரண்டுபேருக்கு மேல் சேர்ந்து வாங்கினால்) அதை ஒரு காலக்கட்டத்தில் பாகப் பிரிவினை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். அல்லது நமது பெற்றோர்கள், முன்னோர்கள் வாங்கிய சொத்தாக இருந்தால் அவர்களின் காலத்துக்குப்பின் அவரின் வாரிசுகள் அந்த சொத்தை பங்கு பிரித்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்*.

சொத்தில் பங்கு இருப்பவர்கள், அந்த சொத்தில் எவ்வளவு பங்கு ஒவ்வொருவருக்கும் சேர வேண்டும் என கணக்கிட்டு, சுமூகமாக அவர்களாகவே பாகப்பிரிவினையை செய்து, அதை ஒரு பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும்போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். 

நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம். அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு பங்குபிரித்தபடியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. 

பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது. எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது. 

இருந்தபோதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம். 

இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம். அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம். 

அதற்குப்பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும். 

ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

மிக அதிகமானவர்கள் இந்த தவறை செய்திருக்கிறார்கள். பத்திரம் எழுதும் அனுபவம் இல்லாதவர்கள், எதையோ எழுதி வைத்து விடுகிறார்கள். பிரச்சனை என்று கோர்ட்டுக்குப் போகும்போது இத்தகைய பத்திரம் சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்ற சட்டப் பிரச்சனையே வந்துவிடுகிறது. எனவே சட்டம் தெரிந்தவர், அல்லது வக்கீல் மூலமாக இதை எழுதிக் கொள்வது நல்லது.

ஆனாலும், நகரங்களில் உள்ள சொத்துக்களை பிரித்துக் கொள்ளும்போது, பாகப் பத்திரம் எழுதி கண்டிப்பாக பதிவு செய்வதே சாலச்சிறந்தது. இங்கு பட்டா மாற்றிக் கொள்ள ஒரு பத்திரம் தேவைப்படும். மேலும், சொத்து பாகம் ஆகிவிட்டது என்பதற்கான சாட்சியம் (ஆதாரம்) இந்தப் பதிவான பாகப் பிரிவினைப் பத்திரம் தான். இல்லையென்றால், சொத்து இன்னும் பாகம் ஆகவில்லை என்றே கருத வேண்டியிருக்கும்


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு)*..... *(TN GOVT REVENUE DEPARTMENT)* .....

 *தமிழ்நாடு வருவாய்த்துறை கட்டமைப்பு (அமைப்பு)*..... *(TN GOVT  REVENUE DEPARTMENT)* .....


தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வருவாய்த்துறையின் கீழான ஆட்சி அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்பு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அவருடைய வழிகாட்டுதலின் கீழ் இயங்குகின்றன. 


இந்த மாவட்ட வருவாய்த்துறை அமைப்பில் வருவாய் கிராமம், உள்வட்டம், வருவாய் வட்டம் மற்றும் மாவட்டம் வரை கீழ்கண்ட வருவாய்த் துறை அலுவலர்கள் நிர்வகிக்கின்றனர்.


இந்த வருவாய்த்துறையின் அலுவலர்களின்   வழியாகத்தான் தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கிராம நிர்வாக அலுவலர்,


 வருவாய் ஆய்வாளர்,


வட்டாட்சியர்,


 மண்டல துணை வட்டாட்சியர்,


வருவாய்க் கோட்ட அதிகாரி,


மாவட்ட வருவாய் அலுவலர்,


 மாவட்ட ஆட்சித் தலைவர்.


கிராம நிர்வாக அலுவலா் அலுவலகம்... (VILLAGE ADMINISTRATIVE OFFICE)


தமிழ்நாட்டிலிருக்கும் மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேருராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய்த்துறையால் குறிப்பிட்டமக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.


மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


 இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,564 வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் என்பவர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.


கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்....


கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்,

வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர் , விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.


வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர். கிராமத்தில் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை அரசுக்கு தொிவித்தல் இவா் மூலமே நடைபெறுகிறது.நில வாி , கடன்கள் , அபிவிருத்தி வாி மற்றும் அரசுக்குச் சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.


பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவுகள் சங்கங்களிலிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல். தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின்போது உடனுக்குடன் மேல் அலுவலா்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பீடு செய்யும் போது உடனிருத்தல்.


கொலை, தற்கொலை, அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைக்கு உதவிபுாிதல்.காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் போன்ற தொற்று நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.


இருப்புப்பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமாித்தல்.கட்டிடங்கள், மரங்கள், மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.புதையல்கள் பற்றி மேல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தல்.


முதியோர் ஓய்வுதியம் வழங்குவது குறித்தான பனிகளைச் செய்தல்.பொதுச் சொத்துக்கள் பற்றி பதிவேட்டைப் பராமரித்தல்.முதியோர் ஓய்வுதியப் பதிவேட்டை பராமரித்தல்.வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.கிராமப் பணியாளர்களின் பணியை கண்காணித்தல்.


நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலர்களுக்கு தொவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.சர்வே கற்களைப் பராமரிப்பது.கிராமத்தில் நிகழும் சமூக விரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.


குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையைத் தெரிவிப்பது.வருவாய்த் துறை அலுவலர்களுக்கும் மற்ற துறை அலுவலர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்


கிராம நி்ர்வாக அலுவலரால் கீழ்கண்ட கணக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கிராம கணக்கு எண். 


1. கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடியின் தாெகுப்பு ஆகும் கிராம கணக்கு எண். 


1.ஏ: கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடியின் உள்ளடக்கம் ஆகும் இது கிராமத்தில் உள்ள புல எண்களை காெண்டுள்ள நிலையான பதிவேடு ஆகும். இது 12 கலங்களைக் காெண்டது ஆகும்.


கிராம கணக்கு எண்: 2: கிராமத்தில் செய்யப்படும் பயிர் வாரியான சாகுபடி கணக்குகளைக் காட்டும் பதிவேடு.)


 ***வருவாய் ஆய்வாளர் அலுவலகம்* ...

(REVENUE INSPECTOR)* .

சில வருவாய்க் கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை பிர்க்கா என்றும் அழைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 1127 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 இந்த வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் வருவாய் ஆய்வாளர் எனும் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு உதவியாக அலுவலக உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.


 *வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் பணிகள்....* 


கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்கிறார். வருவாய் அலுவலர் மட்டுமே உள் வட்ட அளவிலான விசாரணை அலுவலர் ஆவார்.


 *வருவாய் ஆய்வாளரின் பணிகள்:* 


1) உள் வட்ட அளவில் நடைபெறும் அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு இவரே உள்வட்ட அளவிலான நிர்வாக நீதிபதியாவார். 


2) கிராம நிர்வாக அலுவலர்களின் பணியினைக் கவனிப்பது, கிராம நிர்வாகத்தையும் வட்டாட்சியர் அலுவலகத்தையும் இணைக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுகிறார். 


3) அனைத்து சான்றிதழ் தொடர்பான விசாரணை அலுவலராவார்.


சாதிச் சான்றிதழ்


வருமானச் சான்றிதழ்


வசிப்பிடச் சான்றிதழ்


இருப்பிடச் சான்றிதழ்


இருவரும் ஒருவரே சான்றிதழ்


ஒருங்கிணைந்தசான்றிதழ்


சொத்து மதிப்புச்சான்றிதழ்


வாரிசுச் சான்றிதழ்


மற்றும் 


வட்டாட்சியர் அலுவலகத்தால் வழங்கப்படும் பொது மக்கள் கோரும் அனைத்து சான்றிதழ்களுக்கும், இவரே விசாரணை அலுவலர் ஆவார். இவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வட்டாட்சியர் சான்றிதழ்கள் வழங்கு நடவடிக்கை மேற்கொள்வார்.


 *வட்டாட்சியர் அலுவலகம்....* 


மாவட்டத்தின் வருவாய் வட்டங்களின் நிர்வாகத்தை வட்டாட்சியர் நிர்வாகம் செய்வார். தமிழ்நாட்டில் மொத்தம் 220 (தற்ப்போது புதிய வட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது) வருவாய் வட்டங்கள் உள்ளது. இதைத்தாலுகா என்று வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. 


இந்த வட்டாட்சி அமைப்பின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் ஒருவரும் அவருக்கு உதவி புரிவதற்காகச் சில துணை வட்டாட்சியர்களும், எழுத்தர்களும், அலுவலக உதவியாளர்களும் நியமிக்கப்படுகின்றனர். இதற்கான அலுவலகம் வட்டாட்சியர் அலுவலகம் என்கின்றனர்.


 *வட்டாட்சியர் அலுவலகத்தின் பணிகள்..... (TAHSILDAR)* 


மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசுப் பணிகளும் வட்டாட்சியர் அலுவலகத்தின் வழியாக வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் போன்றவர்களின் பரிந்துரைகளின் பேரில் சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ், நில உடமைச் சான்றிதழ் போன்று பல சான்றிதழ்கள் வ்ட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன.


வட்டாட்சி அமைப்புக்குள் மக்களிடையே பிரச்சனைகள் ஏதும் வந்து சட்டம் , ஒழுங்குப் பிரச்சனைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே செயல்படுவதற்கு வாய்ப்பாக இரண்டாம் நிலை நீதித்துறை நடுவராகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார்.


வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு சாராத அமைப்புகளின் செயல்பாடுகளின் மீதான புகார்களை விசாரித்து இவருடைய கட்டுப்பாட்டுக்குள் வரும் அதிகாரங்களைக் கொண்டு கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் வட்டாட்சியர் செயல்படுகிறார். மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட வளர்ச்சி அதிகாரி ஆகியோர் போன்றவர்களுக்கு வருவாய்த்துறைப் பணிகளில் உதவுகிறார்.


வட்டாட்சியர்களின் கடமைகளும், பொறுப்புகளும்....


 *வருவாய் நிர்வாகப் பணிகள்* ....


வட்ட அளவில் பணியாற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் இ கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இதர வருவாய் பணியாளர்களின் பணிகளைக் கண்காணித்தல் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்களின் நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.பயிர் மேலாய்வு செய்தல் நில அளவைப் பணிகளை ஆய்வு செய்தல்.


நில அடமான இனங்களில் நில மதிப்பு ரூ.2000ஃ-க்கும் மிகைப்படாத இனங்களின் மூன்று ஏக்கர் புஞ்சை அல்லது 1½ஏக்கர் நஞ்சை பரப்பளவிற்கு மேற்படாத இனங்களின் ஆணை பிறப்பித்தல். விலை மதிப்பு அற்ற நிலங்களில் வீட்டு மனை கோரிவரும் மனுக்கள் மீது ஆணை வழங்குதல்.


இயற்கை இடர்பாடுகள்தீவிபத்து, வெள்ளம்;புயல் ஏற்படும் காலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிவாரணம் வழங்க தக்க நடவடிக்கை எடுத்தல்.


நில ஆக்ரமணச்சட்டம் 1905ன் படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரணமங்களை அகற்ற நடவடிக்கை எடுத்தல். பி.மெ.மோ இனங்களில் தீர்வை மற்றும் அபராதம் விதித்து ஆணையிடுதல்.கிராமச் சாவடி கால்நடைப்படி கல் இருப்பு 2 சி மரங்கள்,  நிலபராதீனம் இனங்கள், நில ஒப்படை இனங்கள், குத்தகை தண்ணீர் தீர்வை இனங்கள், ஆக்ரமணம் அரசு புறம்போக்கு நிலங்கள், தீர்வை விதிக்கப்பட்ட மற்றும் தீர்வை விதிக்கப்படாத நிலங்கள், இவைகளைத் கள ஆய்வு செய்தல்.முதியோர் உதவித்தொகை மற்றும் இதர நலத் திட்ட உதவி வழங்குதல்.


நில உரிமை மாற்ற இனங்களில் ஆணை பிறப்பித்தல்.நிலம் கையகப்படுத்தும் இனங்களில் நில மதிப்பு ரூ25000 க்கும் மிகைபடாத இனங்களில் தீர்ப்பு வழங்குதல்.நில ஒப்படை பராதீன இனங்களில் வதிமுறை மீறப்பட்ட இனங்களில் உரிய நடவடிக்கை எடுத்தல்.பாசன ஆதாரங்கள் மற்றும் மழை மானிகளை ஆய்வு செய்தல் பாசனம் குறித்து தகராறு இனங்களைத் தீர்த்து வைத்தல்.


வருவாய் நிலை ஆணை பத்தி 11சி-ன் கீழ் பாசன ஆதாரங்களீல் இருந்து விவசாயம் மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு தண்ணீர் எடுத்தலை முறைபடுத்தல் தொடர்பான பணிகள்.


பல்வேறு பாசனச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை செயல்படுத்தல்.அரசுக்கும் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் சேர வேண்டிய தொகைகளை வருவாய் வசூல் சட்டப்படி வசூலித்தல்.


நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி நிலவரி கடன் ஊராட்சி வரி, சர்வே கட்டணம், வேளாண்மை வருமான வரி, நகர்புற நிலவரி, நீதி மன்றக் கட்டணம், வேளாண்மை வருமானவரி, நகர்புரநிலவரி, நீதி மன்றக் கட்டணம், முத்திரை கட்டணம், வறியவர் வழக்குக் கட்டணம், மற்றும் பல்வேறு துறைகளிடம் இருந்து வரப் பெற வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலைத் துரிதப்படுத்துதல்.


கிராம நிர்வாக அலுவலர்கள் பராமரிக்கும் வரி வசூல் கணக்கு மற்றும் இதர கணக்குகளை ஆய்வு செய்தல்.ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்குகளை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.வேளாண்மை நிலங்களுக்கு நியாயமான குத்தகை வாரம் நிர்ணயத்தல்.


நத்தம் மனை வரி நிர்ணயத்தல்.அரசு புறம்போக்கு நிலங்கள் வழியாக நீர் கொண்டு செல்ல பாதைக் கட்டணம் நிர்ணயத்தல்.தண்ணீர் தீர்வை இனங்களின் ஆணை பிறப்பித்தல்.


குத்தகை உரிமைப் பதிவு ஆணை பிறப்பித்தல்.கிராம உதவியாளர் பணி நியமணம் செய்தல்.கிராம நிர்வாக அலுவலர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் தண்டனை அளித்தல்.


கிராம நிர்வாக பணியமைப்பு தொடர்பான பணிகள்.கிராம உதவியாளர் மீதான ஒழுங்கு நடவடிக்கை இனங்களில் ஆணை பிறப்பித்தல். .கிராம நிர்வாக அலுவலர்களின் விடுப்பு மனுக்களின் மீது ஆணை பிறப்பித்தல். 2சி மனைப்பட்டா மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல்.


புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களை தல ஆய்வு செய்து சட்டரோதமாக மரம் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுத்தல். ஆறுகள் மற்றும் அரசு புறம்போக்குகளில் சட்ட விரோதமாக கல் மற்றும் மணல் தோண்டி எடுக்கபடுவதைக் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல்.


வருவாய் நிலை ஆணைகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல், ஆதின ஒழிப்பு இனாம் ஒழிப்புச் சட்ட காலங்களுக்கு அப்பார்பட்ட இனங்கள் மீதான மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.


உப்பளம் அமைக்க நிலங்களை குத்தகைக்கு விடுதல் மற்றும் குத்தகை வசூலித்தல். .

வட்டக் கணக்கு நடைமுறை நுல்படி பதிவேடுகள் மற்றும்;  கணுக்குகள் பராமரித்தல். ரயத்துவாரி நிலங்களில் உட்பிரிவு செய்து ஆணையிடுதல். அரசால் வாங்கப்பட்ட நிலங்களை விதிப்படி தீர்வு செய்தல்.


 **குற்றவியல் நிர்வாக பணிகள்* ....

வட்ட குற்றவியல் நடுவராக பணியாற்றுதல்.வட்டத்தில் சட்டம் ஒழுங்கு பராமரித்தல்.அவசர காலத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்க தக்க நடவடிக்கை எடுத்தல்.குற்றவியல் நடைமுறை பிரிவு விதி 144ன் கீழ் ஆணை பிறப்பித்தல்.கொத்தடிமைத் தொழிலாளர் சட்டத்தினை செயல்படுத்துதல்.


காவல் துரையினரால் ஒப்படைக்கப்பட்ட உரிமை கோரப்படாத பொருட்கள் மீது நடவடிக்கை எடுத்தல். காவல் துறை அலுவலர்களின் கோரிக்கையின் பேரில் புதைக்கப்பட்ட பிணங்களை மீண்டும் தோண்டி எடுத்து மருத்துவ ஆய்வு செய்தல்.


 *பொதுவான பணிகள்...* 


மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடத்துதல்.


பொதுத் தேர்தல் காலத்தில் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் அலுவலராகப் பணியாற்றுதல். 


சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் நடந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தல்.


பொது சுகாதாரம் கால்நடை தொத்து வியாதி மற்றும் காலரா முதலிய இதர தொத்து வியாதிகளைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுத்தல்..


 பிறப்பு இறப்பு பதிவு செய்யும் பணியைக் கண்காணித்தல்.


வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம்.....(REVENUE DIVISIONAL OFFICE)


மாவட்டங்களில் வருவாய்த்துறையில், சில வட்டாட்சியா் அலுவலகங்களை உள்ளடக்கி வருவாய்க் கோட்ட அதிகாரி தலைமையில் வருவாய் கோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் மொத்தம் 76 வருவாய்க் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளில் துணை ஆட்சியர் அல்லது வருவாய்க் கோட்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.


 இப்பணியிடங்களில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நியமிக்கப்பட்டால் துணை ஆட்சியர் என்றும் மற்றவர்கள் நியமிக்கப்பட்டால் வருவாய்க் கோட்ட அலுவலர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவா் உட்கோட்ட நிா்வாக நீதிபதி என அழைக்கப்படுகிறாா்.


 *வருவாய்க் கோட்ட அலுவலகத்தின் பணிகள்....* 


வருவாய்க் கோட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பரிந்துரைகளின்படி கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர் நிலையில் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க கோட்ட வளர்ச்சி அலுவலர் (அ) துணை ஆட்சியாளர்கள் தான் நியமிக்கப்படுகிறார்கள்.மாவட்ட ஆட்சியாளர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இந்த அலுவலகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள வருவாய்த்துறை அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.


 *மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்....* 


தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்ட ஆட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தின் ஆட்சி அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவரின் மேற்பார்வையில் இயங்குகிறது.


 மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பாக மாநில அரசின் வருவாய்த்துறையின் மாவட்டத் தலைமை அதிகாரியாக இருக்கிறார். இருப்பினும் மாவட்டத்திலிருக்கும் அனைத்துத்துறை அலுவல்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரியாகவும் இருக்கிறார்.மாவட்ட ஆட்சித்தலைவர் பொறுப்பிற்கு இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் தமிழக அரசால் நியமிக்கப்படுகிறார்.


 இவரின் கீழ் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் மாவட்ட அளவிலான பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் கீழான துணை அலுவலகங்கள் இருக்கின்றன. இந்த அலுவலகங்களை உள்ளடக்கி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் இயங்குகிறது.


மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பணிகள்.....


மாவட்டத்திற்குத் தேவையான அனைத்துத் துறைப் பணிகளும் இந்த அலுவலகத்தின் கீழ் இயங்கும் துறை அலுவலர்களால் செயல்படுத்தப்படுகிறது.


நன்றி....

வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன தெரிந்து கொள்வோம்.!

 வருவாய் கோட்டாட்சியர்களின் கடமைகளும் பொறுப்புகளும் என்ன தெரிந்து கொள்வோம்.!

1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் & சிறப்புத் திட்ட பணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.

2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.

3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.

4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.

5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில் சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்.

6. குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.

7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.

8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 & 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.

9. கிராம நிருவாக அலுவலர்களுக்கு நியமனம் மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.

கிராம உதவியாளர்கள் நியமனம் & தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்.

10. நுலகவரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசு துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைதுரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.

11. நில ஒப்படை &பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.

12. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.

13. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.

14. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.

15. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்.

16. நிலச் சீர்திருத்த சட்டங்கள்  குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.

17. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.

18. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.

19. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்.

20. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.

21. இந்திய முத்திரை சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை செயல்படுத்துதல்.

22. கிராம கணக்குகளைத் தணிக்கை செய்தல்& பயிர் மேலாய்வு செய்தல்.

23. தமிழ்நாடு இனம் நியாயவாரம் சட்டம் 1963 மேல் முறையீடுகளை விசாரித்தல்.

24. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.

25. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் தணிக்கை செய்தல்.

26. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை வருவாய்த் தீர்வாயம் முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.

27. தமிழ்நாடு விவசாயகுத்தகை சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.

28. மரப்பட்டா வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.

29. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.

30. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல்.

 31. முதியோர் உதவித் தொகை இதர உதவித் தொகை வழங்கும் பணியை கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.

32. பர்மா & சிலோன் அகதிகள் நல் வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.

33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.

34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் & ஆதிதிராவிடர் நலத்திட்டங்களை செயல்படுத்துதல்.

35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துதல்.

36. விபத்து&சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.

37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்.

38. மனுநீதி திட்ட முகாம்மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.

39. நியாயவிலைக் கடைகள் அரிசி ஆலைகள் தணிக்கை &குடிமை பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.

40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை.

41. சில பகுதிகளில் குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.

42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு சட்டத்தினை செயல்படுத்தல்.

43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.

44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.

45. வெடி மருந்துச் சட்டம், படைக்கல சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளை செய்தல்.

46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல்.

 47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு மொலாசஸ் உரிய கணக்குகள் தணிக்கையிடல்.

48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரா சட்டம் அமுல் செய்தல்.

49. முக்கியப் பிரமுகர்கள் வருகையை கவனித்தல்.

50. வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல்  தேர்தல் தொடர்பான பணிகளைச் செய்தல்.

51. ஆறிவொளி இயக்கம் முதலிய அரசுத்திட்டங்களைச் செயல்படுத்த ஒத்துழைப்பு நல்குதல்.

52 கிராமச் சாவடிகள் மற்றும் கால்நடைப்பட்டிகளைத் தணிக்கை செய்தல்.

53. வருவாய் நிலையாணைகளில் கூறப்பட்டுள்ள பிற பணிகளைச் செய்தல்.

நன்றி தகவல் 

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

மத்திய அரசு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றம். 2010/14

விழி கண் மற்றும் கண்காணிப்பு குழு வழக்கறிஞர் தமிழக அரசு.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

பந்தலூர் நீலகிரி மாவட்டம் 

தமிழ் சிறப்புகள்

 *மனிதர்களை போன்று இனமும் நட்பும் கொண்டது - எழுத்துக்கள்.*


- ங் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து க. எ.கா: சிங்கம், தங்கை.


- ஞ் என்னும் எழுத்துக்கும் பின்னால் வரும் இன எழுத்து ச. எ.கா: மஞ்சள், அஞ்சாதே


- ண்ட, ந்த, ம்ப, ன்ற என்னும் எழுத்துகள் பெரும்பாலும் சேர்ந்தே வரும். எசகா: பண்டம், பந்தல், கம்பன், தென்றல்.


- நட்பு எழுத்துக்களை இன எழுத்துகள் என இலக்கணம் கூறுகிறது.


- க், ச்,த், ப் ஆகிய மெய்யெழுத்துக்கள் தன் எழுத்துகளுடன் மட்டும் சேரும். எ.கா: பக்கம், அச்சம், மொத்தம், அப்பம்.


- தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துகளுடன் சேரும் மெய்யெழுத்து - ர், ழ். எ.கா: சார்பு, வாழ்க்கை.


*தமிழ்த்தாத்தா உ.வே.சா.*


* உ.வே.சா ஓலைசுவடி வேண்டி ஒருவரிடம் உரையாடிய நிகழ்ச்சி நடைபெற்ற இடம் - ஈரோடு மாவட்டம் கொடுமுடி.


* ஊர் - திருவாரூர் மாவட்டம் உத்தமதானபுறம்


* இயற்பெயர் - வேங்கடரத்தினம்


* ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.


* அவரின் ஆசிரியர் வைத்த பெயர் - சாமிநாதன்


* உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகனான சாமிநாதன் என்பதன் சுருக்கமே உ.வே.சா


* இவரின் தந்தை - வேங்கடசுப்பையா


* காலம் - 19.02.1855 முதல் 28.04.1942


* 1942 இல் உ..வே.சா நூல்நிலையம் சென்னை பெசன்ட் நகரில் தொடங்கப்பட்டது.


* உ.வே.சா நினைவு இல்லம் உத்தமதானபுரத்தில் உள்ளது.


* உ.வே.சா அவர்களின் தமிழ்ப் பணிகள் வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், சூலியல் வின்சோன் ஆகியோர் பெரிதும் பாராட்டியுள்ளனர்.


* இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.


* பனை ஓலையைப் பக்குவப்படுத்தி, அதில் எழுத்தானி கொண்டு எழுவர். அவ்வாறு எழுத்தப்பட்ட ஓலைக்கு ஓலைச்சுவடி என்று பெயர்.


* ஓலை கிழியாமல் எழுதுவதற்காக ஓலைச்சுவடி எழுத்துகளில் புள்ளி இருக்காது; ஒற்றைக்கொம்பு, இரட்டைகொம்பு வேறுபாடு இருக்காது.


* ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் சில இடங்கள்: 1. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை. 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரசுவதி நூலகம், தஞ்சாவூர்.


* குறிஞ்சிப்பாட்டு - பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று; இதன் ஆசிரியர் கபிலர்.


* தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது என் சரிதம் என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.


* ஓலைச்சுவடிகளைத் தேடி வந்த பெரியவர் - உ.வே.சா


* உ.வே.சா. தம் வாழ்நாள் முழுவதும் ஓய்வில்லாமல் பதிப்பு பணியை மேற்கொண்டார்.


* உ.வே.சா. அவர்களை நாம் தமிழ்த்தாத்தா என அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்


* ஓலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கு விடியற்காலையில் ஆற்றில் விட்டனர்.


* குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள பூக்களின் எண்ணிக்கை - தொண்ணூற்று ஒன்பது


* எண்பத்தேழு வயதுவரை உ.வே.சா. தமிழுக்காக உழைத்தார். முயற்சிக்கு வயது வரம்பு கிடையாது.


* உ.வே.சா பதிப்பித்த நூல்கள்:


- எட்டுத்தொகை - 8


- பத்துப்பாட்டு - 10


- சீவகசிந்தாமணி - 1


- சிலப்பதிகாரம் - 1


- மணிமேகலை - 1


- புராணங்கள் - 12


- உலா - 9


- கோவை - 6


- தூது - 6


- வெண்பா நூல்கள் - 13


- அந்தாதி - 3


- பரணி - 2


- மும்மணிக்கோவை - 2


- இரட்டைமணிமாலை - 2


- பிற பிரபந்தங்கள் - 4


*கடைசிவரை நம்பிக்கை*


* கடைசிவரை நம்பிக்கை இச்சிறுகதை அரவிந்த் குப்தா எழுதிய டென் லிட்டில் பிங்கர்ஸ் என்ற தொகுப்பில் உள்ளது.


* சடகோ சகாகி, 11 வயது ஜப்பான் நாட்டுச் சிறுமி.


* ஜப்பானில் ஹிரோமிமாவிக்கு அருகில் பெற்றோருடன் வசித்து வந்தாள்.


* அணுகுண்டு வீச்சால் ஏற்பட்ட கதிர்வீசின் காரணமாக சடகோவிற்கு புற்றுநோய் பாதிப்பு * ஏற்பட்டது.


* சடகோவின் தோழி சிசுகோ, சடகோவிடம் காகிதத்தால் செய்யப்பட்ட கொக்குகள் ஆயிரம் செய்தால் நோய் குணமாகும் என்றாள். இது நம் நாட்டு நம்பிக்கை என்று கூறினாள்.


* ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு.


* காகிதத்தால் உருவங்கள் செய்யும் ஜப்பானியர் ஒரிகாமி என்று கூறுவர்.


* 1955 அக்டோபர் 25-இல் நல்ல சடகோ இறந்தாள்.


* மொத்தம் 644 காகித கொக்குகள் உருவாக்கி இருந்தாள்.


* சடகோவின் தோழிகள் கூடி மீதமுள்ள 356 காகித கொக்குகள் செய்து எண்ணிக்கையை ஆயிரம் ஆக்கினர். சடகோவின் விருப்பத்தை நிறைவு செய்தனர்.


* சடகோவிற்காக அவள் தோழிகள் பொதுமக்களிடம் நிதி திரட்டி நினைவாலயம் கட்டினர். அதனுள் சடகோவிற்கு சிலை எழுப்பினர்.


* அதன் பெயர் குழந்தைகள் அமைதி நினைவாலயம்.


* நினைவாலயத்தில் எழுதப்பட்ட வாசகம் - உலகத்தில் அமைதி வேண்டும்! இது எங்கள் கதறல்! இது எங்கள் வேண்டுதல்!


*வாழ்த்து - திருவருட்பா*


கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என்


எண்ணில் கலந்தே இருக்கின்றான் - பண்ணில்


கலந்தான்என் பாட்டில் கலந்தான் உயிரில்


கலந்தான் கருணை கலந்து


* திருவருட்பாவை எழுதியவர் - இராமலிங்க அடிகளார்


* சிறப்பு பெயர் - திருவருட்பிரகாச வள்ளலார்


* பிறப்பிடம் - கடலூர் மாவட்டம் மருதூரில் பிறந்தவர்.


* பெற்றோர் - இராமையா - சின்னமையார்


* வாழ்ந்த காலம்: 05.10.1823 - 30.01.1874


* எழுதிய நூல்கள்: ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம்.


* பசித்துயர் போக்கி மக்களுக்கு உணவளிக்க இராமலிங்க அடிகளார் அமைத்தது - அறச்சாலை


* அறிவு நெறி விளங்க வள்ளலார் நிறுவியது - ஞானசபை


* சமர சன்மார்க்க நெறிகளை வழங்கியவர் - இராமலிங்க அடிகளார்.


* இராமலிங்க அடிகளார் பாடிய பாடலின் தொகுப்பிற்கு பெயர் - திருவருட்பா.


* வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் கொண்டவர் - இராமலிங்க அடிகளார்


* வள்ளலார் பாட்டை "மருட்பா" என்று கூறியவர் - ஆறுமுக நாவலர்.


* கடவுளை "கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்", என்றும் "உயிரில் கலந்தான் கருணை கலந்து" என்றும் பாடியவர் - இராமலிங்க அடிகளார்.


* நூல்கள்: ஜீவகாரூன்ய ஓழுக்கம், மனுமுறை கண்ட வாசகம்.


* வள்ளலாரின் பாடல்கள் அனைத்தும் திருவருட்பா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.


* சிறப்பு: சமரச சன்மார்க்க நெறியை வழங்கினார்.


* மத நல்லிணக்கத்திற்கு சன்மார்க்க சங்கத்தையும், உணவளிக்க அறச்சாலை, அறவுநெறி விளங்க ஞான சபையையும் நிறுவினார்.


* வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.


* கருணை நிறைந்த இறைவன் என் கண்ணில், சிந்தனையில், எண்ணத்தில், பாட்டில், பாட்டின் இசையில், என் உயிரில் கலந்து இருக்கிறான்.


அறிவுரைப் பகுதி: திருக்குறள் - அன்புடைமை


சொற்பொருள்:


ஆர்வலர் - அன்புடையவர்


புன்கணீர் - துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்


என்பு - எலும்பு. இங்கு உடல், பொருள், ஆவியைக் குறிக்கிறது.


வழக்கு - வாழ்க்கை நெறி


நண்பு - நட்பு


மறம் - வீரம், கருணை (வீரம் இரண்டிற்குமே


அன்புதான் அடிப்படை என்பது பொருள்)


அன்பிலது - அன்பில்லாத உயிர்கள்


என்பிலது - எலும்பில்லாதது(புழு)


பூசல் தரும் - வெளிப்பட்டு நிற்கும்


ஆருயிர் - அருமையான உயிர்


ஈனும் - தரும்


ஆர்வம் - விருப்பம் (வெறுப்பை நீக்கி விருப்பத்தை


உண்டாக்கும் என்று பொருள்)


வையகம் - உலகம்


என்ப - என்பார்கள்


புறத்துறுப்பு - உடல் உறுப்புகள்


எவன் செய்யும் - என்ன பயன்?


அகத்துறுப்பு - மனத்தின் உறுப்பு, அன்பு


பிரித்து எழுதுக:


அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா -


அன்பு உள்ளத்தில் இல்லாத


வன்பாற்கண் = வன்பால் + கண் - பாலை நிலத்தில்


தளிர்த்தற்று - தளிர்த்து + அற்று - தளிர்த்ததுபோல


வற்றல்மரம் - வாடிய மரம்


- இவரின் காலம் கி.மு. 31 என்று கூறுவர்.


- இதனை தொடக்கமாக கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கண்க்கிடப்படுகிறது.


- சிறப்பு பெயர்: தெய்வப்புலவர், நாயனார், செந்நாப்போதர்


- இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது.


- அதிகாரங்கள்: 133


- அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் வீதம் 1330 குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- திருக்குறளின் வேறு பெயர்கள்: உலக பொதுமறை, முப்பால், தமிழ்மறை. உலகப் பொதுமறை எனப் போற்றப்படுகிறது.


- திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை: கிறித்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு.


எடுத்துக்காட்டு: 2013 + 31 = 2044. கி.பி.2013ஐத் திருவள்ளுவர் ஆண்டு 2044 என்று கூறுவோம்.


ஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து


* பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்.


சொற்பொருள்:


* பண் - இசை


* வண்மை - கொடைத்தன்மை


* போற்றி - வாழத்துகிறேன்


* இருக்கை - ஆசனம்


* திரு.வி.க என்பதன் விரிவாக்கம்


- திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார்.


* திரு.வி.க வின் பெற்றோர்


- விருத்தாசலனார் - சின்னம்மையார்


* திரு.வி.கலியாணசுந்தரனார் பிறந்த ஊர்


- காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம்.


* துள்ளம் தற்பொழுது எவ்வாறு அழைக்கப்படுகிறது?


- தண்டலம் (இவ்வூர் சென்னையை அடுத்துள்ள போரூருக்கு மேற்கே உள்ளது)


திரு.வி.க வின் சிறப்பு:


* இவர் தொழிலாளர் நலனுக்கும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டார். மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். இவரின் தமிழ்நடையைப் போற்றித் "தமிழ்த் தென்றல்" என சிறப்பிக்கப்படுகிறார்.


* திரு.வி.கலியாணசுந்தரனார் படைப்புகள் யாவை?


- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்


- பெண்ணின் பெருமை


- தமிழ்த்தென்றல்


- உரிமை வேட்கை,


- முருகன் அல்லது அழகு முதலியன.


* திரு.வி.க அவர்கள் வாழ்ந்த காலம் என்ன?


- 26.08.1883 - 17.09.1953


* திரு.வி.க இயற்றிய வாழ்த்துப் பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?


- பொதுமை வேட்டல்


* பொதுமை வேட்டல் என்னும் நூல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?


- போற்றி


* பொதுமை வேட்டல் எதனைக் கடந்து உலகத்தை ஒரு குடும்பமாகக் கருதுகிறது?


- நாடு, மதம், இனம், மொழி, நிறம்


* தெய்வ நிச்சயம் முதலாகப் போற்றி ஈறாக எத்தனை தலைப்புகளில் உள்ளது?


- நாற்பத்து நான்கு தலைப்புகளில், நானூற்று முப்பது பாக்களால் ஆனது இந்நூல்.


நூல் பயன்:


- இந்நூலைக் கற்பார்க்கு நாடு, மதம், மொழி, இன வேற்றுமைகள் விலகும்; சமுதாய ஒற்றுமை வளரும், மனித நேயம் மலரும், உலகம் தழுவிய ஒருமைப்பாட்டுணர்வு உண்டாகும்.


* பொதுமை வேட்டல் எத்தனை பாக்களால் ஆனது?


- நானூற்று முப்பது


* சென்னையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராக திரு.வி.க அவர்கள் பணியாற்றினார்?


- இராயப்பேட்டை வெஸ்லி பள்ளி


* இறைவன் உயிரில் வைத்தது எதனை?


- இறைவன் கொடைத்தன்மையை உயிரில் வைத்தார்.


* இறைவனின் இருக்கை யாது?


- இறைவனின் இருக்கை உண்மை.


திருக்குறள்


சொற்பொருள்:


* புரை - குற்றம்


* பயக்கும் - தரும்


* சுடும் - வருத்தும்


* அன்ன - அவை போல்வன


* எய்யாமை - வருந்தாமல்


* அகம் - உள்ளம்


* அமையும் - உண்டாகும்.


ஆசிரியர் குறிப்பு:


* திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.


சிறப்பு பெயர்கள்:


- நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர்


நூல் குறிப்பு:


- மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள்.


- இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டது.


- ஒவ்வோர் அதிகாரத்திற்கும் பத்துக் குறட்பாக்கள் என ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள் உள்ளன.


- இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.


- இது 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


- திருவள்ளுவரின் பெற்றோர் யார்?


- தாயின் பெயர் - ஆதி


- தந்தையின் பெயர் - பகவன்


* திருவள்ளுவர் எந்த ஊரில் பிறந்தார்?


- மயிலாப்பூர் (மதுரை என்றும் கூறுவர்)


* திருவள்ளுவர் யாரால் வளர்க்கப்பட்டார்?


- வள்ளுவன் ஒருவனால் வளர்க்கப்பட்டார்.


* வள்ளுவன் என்றால் பொருள் யாது?


- அரசருக்கு அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்


* திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?


- வாசுகி


* வாசுகி யாருடைய மகள்?


- மார்க்கசகாயர் என்னும் வேளாளரின் மகள்


* திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?


- நெசவுத் தொழில்


* திருவள்ளுவரின் வேறு பெயர்கள் என்ன?


- நாயனார், தேவர், முதற்பாவலர், தெய்வப் புலவர், நான்முகன், மாதானுபங்கி, செந்நாப் போதார், பெருநாவலர், பொய்யில் புலவர் என்பன.


* திருவள்ளுவர் காலம் எது?


- கி.மு. 31


- திரு என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப் பெறுகிறது.


* திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?


- மூன்று பிரிவுகளைக் கொண்டது.


1. அறத்துப்பால்


2. பொருட்பால்


3. இன்பத்துப்பால்


* இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?


- திரு+குறள். மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.


* திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது.


* திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?


- பத்து


* திருக்குறள் நூலின் பயன் யாது?


- திருக்குறள் கற்பதனால் மனித வாழ்க்கை செம்மையுறும். பண்புகள் வளரும், உலகெல்லாம் ஒன்றெனும் உயர்குணம் தோன்றும், மனிதர்களிடையே வேறுபாடுகள் மறையும், எல்லா உயிரிடத்தும் அன்பு தழைக்கும்.


* உடலை நீர் தூய்மை செய்யும்: வாய்மை உள்ளத் தூய்மையை வெளிப்படுத்தும்.


* வாய்மை என்றால் என்ன?


- மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.


* திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?


- ஆயிரத்து முந்நூற்று முப்பது


* திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என்று வழங்கப் பெறுகிறது?


- உலகம் ஏற்கும் கருத்துக்களைக் கொண்டுள்ளதால் இவ்வாறு வழங்கப் பெறுகிறது.


பிரித்து எழுதுக:


* யாதெனின் - யாது + எனின்


* பொய்யாதொழுகின் - பொய்யாது + ஒழுகின்


* சொற்றொடரில் சொற்களை அமைத்தல்:


* இயற்கை - குற்றாலத்தில் உள்ள இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவர்கின்றன.


* பெண்மை - பாரதியார் பெண்மையைப் போற்றிப் பாடியுள்ளார்.


* வாய்மை - வாய்மையே வெல்லும் என்ற தொடர் தமிழக அரசின் சின்னத்தில் உள்ளது.


* உள்ளம் - குழந்தையின் உள்ளண் கள்ளம் புகா இடமாகும்.

அரசின் உரிமைகள் என்னென்ன?

 கிராம நத்தம் நிலமானது அரசுக்கு சொந்தமானதா? பட்டா வாங்கலாமா? அரசின் உரிமைகள் என்னென்ன?

2004 (2) MLJ 708 & 2012 (2) CTC315


பட்டா அல்லது பத்திரம் எது சொத்தின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணம்?

WP.எண்.16294/2012

SA.No.1715/1989 SA.No.2060/2001 SA.No.314/2008


பவர் ஏஜென்ட் இல்லாமல் பவர் பத்திரத்தை (Power of Attorney) ரத்து செய்ய சார் பதிவாளர் மறுக்க முடியுமா?

2016 2 CTC 438


அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் குடியிருந்து வருபவர்களுக்கு மின்சார இணைப்பை மறுக்க முடியுமா?

2014 (1) MLJ 261


சொத்தானது கிராம நத்தமாக மாற்றப்பட்டு விட்டால் அது அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகிவிடுமா...?

தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புகள் சட்டம், 1905-பிரிவு 6

ஆக்கிரமிப்பாளர்கள்-கேள்விக்குரிய நிலம் கிராமநாதன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் அரசிடம் ஒப்படைக்க முடியாது- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டத்தின் விதிகள், வழக்குச் சொத்துக்கள் தொடர்பாக எதிர்மனுதாரர்களின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது.

2007 (2) MLJ 1113


பயணிகளுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி பஸ் டிக்கெட்-ஐ கேன்சல் செய்தால்...?

NATIONAL CONSUMER

DISPUTES REDRESSAL

COMMISSION, NEW DELHI

REVISION PETITION NO, 1092 OF 2020


கூடலூர் நுகர்வோர் மனிதவள 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

{மாநில அரசு அங்கீகாரம் பெற்றது}

நீலகிரி மாவட்டம் 

வாக்கு பதிவு முக்கிய அறிவிப்பு

 *பொது  மக்கள்  நலன்  கருதி  ஒரு  முக்கிய  அறிவிப்பு !*

நீங்கள் வாக்குச்சாவடி சென்று , அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது தெரியவந்தால், உங்கள் ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை இரண்டில் ஏதேனும் ஒன்றை காட்டி, 

வாக்குரிமைச் சட்டம் பிரிவு 49A ன் கீழ் *"சேலஞ்ச் ஓட்டு"* கேட்டு வாக்கினை பதிவு செய்யுங்கள்.                      உங்கள் வாக்கினை உங்களுக்கு முன்னதாக வேறொருவர் பதிவு செய்திருந்தால், 

*"டெண்டர் ஓட்டு"* கேட்டு உங்கள் வாக்கினை பதிவு செய்யுங்கள். ஒரு வாக்குச் சாவடியில் *14%* க்கு மேல் டெண்டர் ஓட்டு பதிவாகி இருந்தால்,

அங்கு மறு வாக்குப் பதிவு நடத்தப்படும்.  

 வாக்குரிமையின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற்றிட இத்தகவலை அதிகபட்ச வாட்ஸ் அப் குழுக்களுக்கும் , நண்பர்களுக்கும் சமுதாய  நலன் கருதி இத்தகவலை மறவாமல் பகிர்ந்திடுங்கள்.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

643233.

RTI Act, 2005 அரசாணைகள்

 தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act, 2005)

இணையதளத்தில் அரசாணைகள்

2 : டபிள்யூ.பி. (MD) 2016/7.4.2016 இன் எண். 4324

* House Feed நிறுவனமும் ஒரு பொது அதிகார அமைப்பாகும். அதனால் இந்த உத்தரவின் நகல் கிடைக்கப்பெற்ற தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் தமது நிறுவனத்தில் ஒரு பொதுத் தகவல் அதிகாரியையும் முதல் மேல் முறையீட்டு அதிகாரியையும் . STATE INFORMATION COMMISSION, PUNJAB Date of decision: 20.05.2015

* கூட்டுறவுச் சங்கங்களும் தனியார் கல்வி நிறுவனங்களும் தகவல் அளிப்பதற்குக் கடமைப்பட்டதாகும். Punjab-Haryana High Court Civil Writ Petition No.19224

* கூட்டுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள் தகவல் அளிக்கக் கடமைப்பட்டவர்கள் அல்லவென்று பதிலளித்ததையடுத்து எழுந்த வழக்கில் கூட்டுறவுத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்திய தகவல் ஆணையத்தில் தோன்றாததால் அவர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் குற்ற வழக்கு நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது என்பதற்கு விளக்கங் கேட்டு பிறப்பித்த உத்தரவு. File No. CIC/SH/C/2014/000550

ஐம்புலம் சூரணம் செய்முறை விளக்கம்

 🪷 *புகை பிடிப்பவர்கள் மற்றும் அடிக்கடி சளி பிடிக்கும் பாதிப்பு உள்ளவர்கள் நுரையிரல் சுத்தம் செய்யும் ஐம்புலம் சூரணம் செய்முறை விளக்கம்*🪷

⚜️ *தேவையான மூலப்பொருட்கள்*⚜️

1. சித்தரத்தை - 50g

2. தாளிசபத்திரி - 50g

3. அதிமதுரம் - 25g

4. சுக்கு - 50g

5. சாதிக்கோஷ்டம் - 25g

6. ஆடாதோடை - 10g

⚜️ *செய்முறை விளக்கம்*⚜️

✍🏿 மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்

✍🏿 தனி தனியாக நன்கு வருத்து கொள்ளுங்கள்

✍🏿 தயார் செய்த அனைத்தையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்

✍🏿 அரைத்த மூலபொருட்கள் அனைத்தையும் சலித்து தயார் செய்து காற்று படாமல் வைத்து கொள்ளுங்கள்

⚜️ *சாப்பிடும் முறை*⚜️

🔅 200மி தண்ணீரை கொதிக்க வைத்து அதில் 1 ஸ்பூன் அளவு தயார் செய்த பொடியை கலந்து நன்கு கொதிக்க வைத்து 2 நிமிடத்தில் அனைத்து விடவும்

🔅 சூடான நிலையில் டீ போல குடிக்க வேண்டும் சுவைக்கு தேன் கலந்து கொள்ளலாம்

🔅 இத்தனை தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலை எடுக்கலாம் 

🔅 இதை உணவுக்கு பின் அல்லது உணவுக்கு முன் என எப்படி வேண்டும் என்றாலும் எடுக்கலாம் அது உங்கள் உடல் நிலை சர்க்கரை

👉 *இதனால் என்ன மருத்துவ நன்மை கிடைக்கும்???*

இந்த சூரணம் முழுக்க முழுக்க நுரையிரல் சுத்தம் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த மூலிகை

இதனால் சளி, ஆஸ்துமா, இருமல், மூக்கடைப்பு, நுரையிரல் அலர்ஜி, சுவாச குறைபாடு, மூச்சு வாங்குதல், சுவாச முறைபாடு என அனைத்துக்கும் ஒரு வர பிரசாதம்

இதனை தேவை படும் நாள் வரை எடுத்தால் போதும்

புகை பிடுப்பவர்கள் வாரம் 2 முறை இதை எடுத்து கொண்டால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்

🔅🔅🙏🏼🙏🏼

கூடலூர் நுகர்வோர் மனிதவள  சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம். 

India's major research institutions: -

 List of names and places of India's major research institutions: - 


 ◆ Indian Agricultural Research Institute - New Delhi 

 ◆ Central Sugarcane Research Institute - Coimbatore 

 ◆ Central Tobacco Research Institute - Rajamundri 

 ◆ Indian Sugar Technology Institute - Kanpur 

 ◆ National Milk Research Institute - Colonel 

 ◆ Central Skin Research Institute - Chennai 

 ◆ Central Drug Research Institute - Lucknow 

 ◆ Indian Meteorological Institute - New Delhi 

 ◆ Raman Research Institute - Bangalore 

 ◆ National Metallurology Laboratory - Jamshedpur 


 ◆ Textile Industry Research Institute - Ahmedabad 

 ◆ National Institute of Immunology - New Delhi 

 ◆ Baba Nuclear Research Center - Trambe 

 ◆ Indian Petroleum Company - Dehradun 

 ◆ All India Medical Sciences Institute - New Delhi 

 ◆ Tata Institute of Fundmental Research - Mumbai 

 ◆ Indian Security Press - Nashik Road, Pune 

 ◆ Central Food Technology Research Institute - Mysore 

 ◆ Central Building Research Institute - Roori 

 ◆ Central Glass and Ceramic Research Institute - Kolkata 


 ◆ Central Electricity Research Institute - Karaikudi 

 ◆ Central Mechanical Engineering Research Institute - Durgapur 

 ◆ Central Salt and Marine Chemical Research Institute - Bhavnagar 


 Indian National Highway Authority - New Delhi 

 ◆ National Earth Physics Research Institute - Hyderabad 

 ◆ Central Coconut Research Institute - Kasargode 

 ◆ Central Potato Research Institute - Shimla 

 ◆ National Institute of Vision Disability - Dehradun 

 ◆ Central Forest Research Institute - Dehradun 

 ◆ Indian Democratic Research Institute - Ranchi 


 ◆ Central Fuel Research Institute - Jalgoda 

 ◆ Central Mining Research Center - Dhanbad 

 ◆ Survey of India - Dehradun 

 ◆ Indian Meteorological Department - Pune 

 ◆ Institute of Bacterial Technology - Chandigarh 

 ◆ Plasma Research Institute - Gandhinagar 

 ◆ Indian Earth Magnetic Institute - Mumbai 

 ◆ Indian astronomy company - Bangalore 

 ◆ National Maritime Company - Panaji 

 ◆ Diesel Locomotive Works - Varanasi 

 ◆ Central Road Research Institute - New Delhi 


 ◆ Central Tractor Company - New Delhi 

 ◆ Central Botanical Research Institute - Lucknow 

 ◆ Indian Chemical Biology Institute - Kolkata 

 ◆ High latitude Research Laboratory - Gulmark 

 ◆ Central Environmental Engineering Research Institute - Nagpur 

 ◆ Industrial Toxic Research - Lucknow 

 ◆ Cellular and Molecular Biology Center - Hyderabad 

 ◆ Indian Archeology Department - Kolkata 

 ◆ Central Suite Technology Research Institute - Kolkata 


 ◆ DNA Center Fingerprint and Diagnosis - Hyderabad 

 ◆ National Brain Research Center - Gurgaon 

 ◆ Bharat Electronic Limited - Jalahali 

 ◆ Central Paddy Research Institute - Cuttack 

 ◆ Indian Legal Research Institute - Kanpur

வேட்புமனு தாக்கல் செய்ய

 *வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய தொகுதிகளின் அதிகபட்ச எண்ணிக்கை தொடர்பான விதிகள்* 


ஆகஸ்ட், 1996க்கு முன்பு, ஒரு வேட்பாளருக்கு அவர் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்தத் தடையும் இல்லை. ஆகஸ்ட், 1996 இல், 1951-சட்டத்தின் 33-வது பிரிவில் உட்பிரிவு (7) சேர்க்கப்பட்டது மற்றும் இந்த திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம், கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பொதுத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஒரு வேட்பாளரை இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மேல் பரிந்துரைக்க முடியாது. அதேபோல், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு மேல் அவரை நியமிக்க முடியாது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 33(7) வழங்குகிறது:


ஒரு நபர் தேர்தலுக்கு வேட்பாளராக நியமிக்கப்படக்கூடாது,-


(a) ​​மக்கள் சபைக்கு (அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பொதுத் தேர்தலின் போது, ​​இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து;


(b) ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு (அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) பொதுத் தேர்தல் நடந்தால், அந்த மாநிலத்தில் உள்ள இரண்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து;


(c) மாநிலத்தின் இரண்டுக்கும் மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து, அத்தகைய கவுன்சிலைக் கொண்ட ஒரு மாநிலத்தின் சட்டமன்றக் கவுன்சிலுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் பட்சத்தில்;


(d) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக, மாநில கவுன்சிலுக்கு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தல்களில், அத்தகைய இரண்டு இடங்களுக்கு மேல் நிரப்புவதற்கு;


(e) ஒரே நேரத்தில் நடத்தப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து, இதுபோன்ற இரண்டுக்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து, மக்கள் சபைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால்;


(f) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரு மாநிலத்தின் சட்டப் பேரவைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால், அதுபோன்ற இரண்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து ஒரே நேரத்தில் நடைபெறும்;


(g) ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக மாநிலங்களவைக்கு நடத்தப்படும் இடைத்தேர்தல்களில், அத்தகைய இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கு ஒரே நேரத்தில் நடத்தப்படும்;


(h) ஒரே நேரத்தில் நடைபெறும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து, அத்தகைய கவுன்சில் கொண்ட மாநிலத்தின் சட்ட மேலவைக்கு இடைத்தேர்தல்கள் நடந்தால், அத்தகைய இரண்டுக்கும் மேற்பட்ட கவுன்சில் தொகுதிகளில் இருந்து.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி


 *சிவில் வழக்கில் வழக்கு தரப்பினருக்காக முகவராக ஆஜராகி வழக்கு விஜயாஜியங்களை கவனித்துக் கொள்வதற்கும், மனு செய்வதற்கும், மனுவை திரும்ப பெறுவதற்கும், சாட்சியங்களை விசாரணைக் உட்படுத்துவதற்கும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்வதற்கும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை பெறுவதற்கும், நீதிமன்றத்தில் உள்ள வழக்கு கோப்புகளை பார்வையிடுவதற்கும் முகவராக நியமிப்பதற்கான மனு மாடல் தேவைப்படுவோர் பயன்படுத்திக் கொள்ளலாம்*

 *கனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்*

பழனி

முதலேற்பு வழக்கு எண் .316/2006

நிறைவேற்றுகை மனு எண்.30/2019


டி.எம்.எஸ். நீலாவதி

மனுதார் / வாதி/தீர்ப்பாணை பெற்றவர்


           / எதிர் /

1.திரு.சுப்பைய்யா,

2. திரு.சொக்கைய்யா பிள்ளை,

3. திரு.பழனிச்சாமி,

எதிர்மனுதார்கள்/எதிர்வாதிகள்/தீர்ப்புக் கடனாளிகள்


உரிமையியல் விசாரணை முறைச் சட்டம் - கட்டளை 3 விதி - 2 இன் படி Power Agent நியமனம் செய்து அனுமதி வழங்கக் கோரும் மனு


1 . மனுதாராகிய நான் இந் நிர் வழக்கில் மனுதாரரும் / வாதியும் / தீர்ப்பாணை பெற்றவரும் / ஒரு முக்கிய சாட்சியும் ஆவேன். 


2. மனுதாராகிய எனக்கு வயது .......... ஆன மூத்த குடிமக்களில் ஒருவர் ஆவேன். எனது வயதான உடல் தளர்ச்சி சூழ்நிலை காரணமாக என்னால் இவ்வழக்கில் மாண்பமை நீதி மன்றத்திற்கு வருகை தர இயலாமலும், வழக்கு விஜயாஜ்ஜியங்களை கவனிக்க முடியாமலும் இருந்து வருகிறேன். மேலும் எனது வழக்கறிஞர் திரு. புலமை வேங்கடாசலம், எம்.பி.எல்., அவர்களுக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருதாலும் இந்நிர் வழக்கினை தொடர்ந்து வழிநடத்த இயலாமல் இருந்து வருகிறேன். இந்த தெய்வாதீனமான சூழ்நிலைகளால் மனுதாராகிய எனது தரப்பு கருத்துக்களை மாண்பமை நீதிமன்றத்தில் பதிவிட இயலாமல் இருந்து வருகிறேன். 


3. மேலும் இது போன்ற சூழ்நிலைகளில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை மேற்கொள்ளPower Agent ஆக அக்கறையுள்ள ஒருவரை நியமனம் செய்து கொள்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு எண் .CR.P.(PD) No.490/2018 And C.M.P.No.2558/2018 – தீர்ப்புரை நாள் : 18.09.2020 என்ற வழக்கில் தீர்ப்புரைத்துள்ளது. இத்தீர்ப்புரையானது அரசியல் அமைப்புச் சட்டம் - 1950 இன் 14வது பிரிவு படி எனது இந் நிர் வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.


4.. ஆதலால் இந் நிர் வழக்கில் வழக்கு விஜயாஜ்ஜியங்களை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு உதவியாக எனது மகன் பழனிவேல், த/பெ... ................. வயது .......... என்பவரை power Agent ஆக நியமித்து உத்தரவிட வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கிறேன்.

                  மனுதார்


தேதி :

இடம்: பழனி


இம்மனு நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் - 1872 இன் 70வது பிரிவு படி இதையே பிரமாணமாக இதில் .............. தேதியன்று என்னால் எனது இல்லத்தில் வைத்து கையொப்பம் செய்யப்படுகிறது.


                      Party In Persion


💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

💐💐💐💐💐💐

உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 (25)

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908 இன் 25 மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து சட்டம் தெளிவோம் 


IPC 25. (1) ஒரு தரப்பினரால் செய்யப்படும் மனுவின் பேரில் அது பற்றிய அறிவிப்பைத் தரப்பினர்களுக்கு அளித்த பிறகு மற்றும் அப்படி விரும்புவோரை அதுபற்றிக் கேட்டறிந்த பின்னர், நீதியை நிலைநாட்டுவதற்கு இப்பிரிவின் கீழ் உத்தரவு பிறப்பிப்பது அவசியம் என்று தெளிவு பெற்றால், எந்தக் கட்டத்திலும் உச்ச நீதிமன்றம், ஒரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றம் அல்லது வேறு உரிமை இயல் நீதிமன்றத் தில் உள்ள வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றை மற்றொரு மாநிலத்திலுள்ள உயர் நீதிமன்றத்திற்கு அல்லது வேறு உரிமையியல் நீதிமன்றத் திற்கு மாற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(2) இப்பிரிவின்கீழ் செய்யப்படும் மனு ஒவ்வொன்றும் உறுதிமொழிப் பத்திரம் இணைக்கப்பட்டு அவசரப் பட்டியலில் இடம் பெறத்தக்கதாக இருக்க வேண்டும்.


(3) அத்தகைய வழக்கு, மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை மாற்றி அளிக்கப் பெற்றுள்ள நீதிமன்றம், அத்தகைய மாற்றத்திற்கான உத்தரவில் சிறப்பாக நெறிப் படுத்தப்பட்டவற்றிற்கு ஆட்பட்டு, அதனை மறுவிசாரணை செய்யலாம் அல்லது அது மாற்றப்பட்ட நிலையில் இருந்த கட்டத்திலிருந்து அதனைத் தொடர்ந்து நடத்தலாம்.


(4) இப்பிரிவின் கீழ் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்சநீதி மன்றம் நிராகரிக்கும்போது, அந்த மனு அற்பமானது அல்லது வீண்தொல்லை தரக்கூடியது என்று கருதினால், அந்த மனுதாரர், எதிர்த்தரப்பினருக்கு இழப்பீடு தரவேண்டும். 


அதனை வழக்கின் தன்மைக்கு ஏற்பவும் தாம் தக்கதெனக் கருதுவதும் இரண்டாயிரம் ரூபாய்களுக்கு அதிகப்படாததுமாகிய ஒரு தொகையை இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடலாம்.


(5) இப்பிரிவின்கீழ், மாற்றப்பட்ட முறையீடு, அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றில் அத்தகைய வழக்கு மேல் மேல்முறையீடு அல்லது வேறு நடவடிக்கை ஆகியவற்றுக்கு முதலேற்பு நிலையில் அனுசரிக்கப்பட்ட சட்டத்தையே தொடர்ந்து அனுசரிக்கப்பட வேண்டும்.


 Cpc கட்டளை 25. விதி (1) நிறைவேற்றுகைக்காக அந்தத் தாக்கீது ஒப்படைக்கப்பட்ட நபர், அது எப்பொழுது எவ்வாறு நிறை வேற்றுகை செய்யப்பட்டது என்பதற்கான மேற்குறிப்புச் செய்யவேண்டும். 


அதனைத் திருப்பித்தர வேண்டிய கெடு தாண்டியிருந்தால், காலதாமதத்துக்குரிய காரணத்தையும் அல்லது நிறைவேற்றுகை செய்யப்படாதிருப்பின் அதற்குரிய காரணத்தையும் அதில் மேற்குறிப்புச் செய்து, நீதிமன்றத் திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


(2) அத்தகைய அலுவலரால் நிறைவேற்றுகை செய்யஇயலவில்லை என்று மேற்குறிப்புச் செய்யப்பட்டிரும் தால், அவருடைய இயலாமைபற்றி நீதிமன்றம்அவரை நேரில் விசாரிக்க விசாரணை செய்ய வேண்டும். அதன் முடிவைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா. கணேசன்

அருப்புக்கோட்டை


💐💐💐💐💐💐💐

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் 

நீலகிரி மாவட்டம்

💐💐💐💐💐💐💐


CERTIFICATION MARKS IN INDIA


 ✅ CERTIFICATION MARKS IN INDIA 


🔶 Certification marks in India are used to assure consumers about the quality and standards of various goods and services. 


💢 AGMARK

✔️ Purpose: Guarantees the quality and purity of agricultural produce.

✔️ Issued by: The Directorate of Marketing & Inspection under the Ministry of Agriculture & Farmers Welfare, Government of India.


💢 ISI Mark

✔️ Purpose: Certification mark for industrial products, signifying conformity to Indian Standards.

✔️ Issued by: The Bureau of Indian Standards (BIS).


💢 FPO Mark

✔️ Purpose: Indicates that processed fruit products adhere to food safety standards.

✔️ Issued by: Ministry of Food Processing Industries.


💢  India Organic

✔️ Purpose: Certifies that a product meets the National Standards for Organic Production. 

✔️ Issued by: the National Programme for Organic Production (NPOP).


💢  Ecomark

✔️ Purpose: An eco-label issued for products that demonstrate reduced environmental impact. 

✔️ Issued by:  The Bureau of Indian Standards (BIS).


💢  Woolmark

✔️ Purpose: Assures the purity and quality of wool products.

✔️ Issued by: The Woolmark Company (a subsidiary of Australian Wool Innovation Limited).


💢  Hallmark 

✔️ Purpose: Certifies the purity of precious metals like gold and silver in jewelry.

✔️ Issued by: The Bureau of Indian Standards (BIS).

  

Gudalur Consumer Human Resources and Environment Protection Center - The Nilgiris 643233.




கர்ப்பிணிபெண்கள்* - 3

 *#கர்ப்பிணிபெண்கள்* - 3


போலிக் அமிலக் குறைபாடு

 

1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.


2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்


3. குதிக்கால் வலி பிரதானமாக இருத்தல்.


4. தோல் வெளுப்பாக இருத்தல்.

5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்


6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்


7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.

8. இரத்தச் சோகை அதிகரித்தல்


9. மதியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.


கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மருந்து உட்கொண்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.


கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.


வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.


பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.


கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம்.


உடல் காரணங்களால் மட்டுமல்ல உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. 


கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு. தேவைக்கேற்ப குடிக்கலாம். 


கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 643233.

ஐஸ் கிரீம்களில்

 ஐஸ் கிரீம்களில், "கிரீம்' அதிகமாக இருப்பதற்காகவும், நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை இருப்பதற்காகவும், அதில், "சயனைடு' ஸ்டார்ச் மாவு கலக்கப்படுவதால், அதைச் சாப்பிடும் குழந்தைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தான், மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' மற்றும் ஜவ்வரிசி தயாரிக்கும் சேகோ தொழிற்சாலைகள் அதிக அளவில் உள்ளன. மரவள்ளிக் கிழங்கை அரைத்துத் தயாரிக்கப்படும், "ஸ்டார்ச்' எனப்படும், கிழங்கு மாவு, பேப்பர் கூழ், பசை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில், தோல் நீக்கிய பின்பே மாவு தயாரிக்க வேண்டும். பெரும்பாலான ஆலைகள், தோலை நீக்காமலேயே, "ஸ்டார்ச்' தயாரிக்கின்றன.

வியாபாரிகள் பலர், தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை வாங்கி, குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருட்களில் கலக்கின்றனர். "சயனைடு' என்பது கொடிய விஷம். 

இதன் வீரியத்தைக் குறைத்து, "ஸ்டார்ச்' மாவில் கலக்கின்றனர். 

அந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கின்றனர்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, சேலம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அனுராதா கூறியதாவது:"ஸ்டார்ச்'சை பேப்பர் கூழ், பசை தயாரிப்புக்காக விற்பனை செய்கிறோம் என, சேகோ ஆலை உரிமையாளர்கள் கூறுகின்றனர். 

ஆனால், வெளி மார்க்கெட்டில் வியாபாரிகள் தோல் கலந்த, "ஸ்டார்ச்'சை கொள்முதல் செய்து, சில ஐஸ் கிரீம், நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர். 

பால் மூலம், "கிரீம்' உற்பத்தி செய்ய செலவு அதிகமாகும். அதற்குப் பதிலாக, "ஸ்டார்ச்' மாவு கலப்பதால், குறைந்த செலவில், "கிரீம்' அதிகமாகக் கிடைக்கும். இதனால், சில தயாரிப்பாளர்கள், 

ஐஸ் கிரீமில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர்.

குழந்தைகள் பாக்கெட்டுகளில் அடைத்த நூடுல்ஸ்களை விரும்பி வாங்கிச் சாப்பிடுகின்றனர். இந்த நூடுல்ஸ்களில் நெகிழ்வுத் தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கப்படுகிறது.

சில்லி சிக்கன், மீன் வருவல் ஆகியவற்றிலும் மசாலா பிடிக்க வேண்டும், 

மொறுமொறு தன்மை கிடைக்க வேண்டும் என்பதற்காக,

குறிப்பிட்ட அளவில், "ஸ்டார்ச்' கலக்கின்றனர். "ஸ்டார்ச்' தயாரிப்புக்காக, தோலுடன் கூடிய மரவள்ளிக் கிழங்கை அரைத்து உலர வைக்கும்போது, தோலில் காணப்படும், "சயனைடு' விஷத்தின் வீரியம் குறைந்து விடும். எனினும், முழுமையாகக் குறையாமல் ஓரளவு மாவில் கலந்திருக்கும் .

"ஸ்டார்ச்' கலந்த நூடுல்ஸ், ஐஸ் கிரீம் சாப்பிடும் குழந்தைகள், குறுகிய காலத்தில் வயிற்று வலி, அல்சர் உட்பட பல்வேறு பாதிப்புக்கு ஆளாவர். நூடுல்ஸ் தயாரிக்கும் பெற்றோர், நூடுல்சை பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொதிக்க வைத்த நீரில், 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின், வெந்நீரை கொட்டி விட்டு, நூடுல்சை எடுத்து வழக்கம் போல தயாரிக்க வேண்டும். 

ஐஸ் கிரீமை பொருத்தவரை, நுகர்வோர் விழிப்புடன் இருப்பது அவசியம்.உணவுப் பொருட்களில் சட்டவிரோதமாக, "ஸ்டார்ச்' கலக்கப்படுவதால், சேகோ ஆலைகளில் தோல் நீக்கிய மரவள்ளிக் கிழங்கில் இருந்து, "ஸ்டார்ச்' தயாரிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. 

மீறி தயாரிக்கும் ஆலைகள் மீது, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அனுராதா கூறினார். - நமது சிறப்பு நிருபர் -

கிர்ணி பழத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க

 இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கிர்ணிப்பழம்...!


கோடைக்காலத்தில் மிக அதிகமாக கிடைக்கும் இப்பழத்தில் தண்ணீரின் அலவு அதிகமாக உள்ளதால் இதனை ஜூஸ் செய்து பருகும்போது நமது உடல் வெயிலை தாங்கும் அளவிற்கு குளிர்ச்சி அடைந்து உடலில் நீரின் அளவை சமன்செய்து தேவையில்லாத நீரை வெளியேற்றுகிறது.


உடல் சூட்டினால் கண் எரிச்சல், கண் நோய் ஏற்படலாம். இதற்கு தினமும் இரண்டு கிர்ணிப்பழம் துண்டுகளை சர்க்கரை சேர்த்து சாப்பிடுங்கள். இதனால் கண்கள் பிரகாசிக்கும். 


ஒரு கப் கிர்ணி பழத்தில் உள்ள கலோரி 546, வைட்டமின் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மூன்றும் இதில் அதிகமுண்டு.

 

கிர்ணிப்பழ விழுதுடன் உப்பு, இஞ்சிச்சாறு, சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல், எரிச்சல், குடல் நோய் குணமாகும். கிர்ணி விதை பவுடரை தேனில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

 

பசியின்மை, எடை குறைவு, மலச்சிக்கல், சிறுநீர் பாதைக் கோளாறு, அமிலத் தன்மை, அல்சர் ஆகிய அனைத்துக்கும் நல்லது. 


பசியின்மையை சரி செய்து, களைப்பை நீக்கி, வாதத்தையும் பித்தத்தையும் குறைக்கும்.வேறு எந்தப் பழமும் இதைப் போல வேகமாக உடல் சூட்டைத் தணிப்பதில்லை.

 

உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும் சேர்ந்தே இழக்கிறோம். அதை ஈடுகட்ட பழ ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். தர்பூசணி, கிர்ணி, திராட்சை, இளநீர் போன்றவற்றில் சோடியம், பொட்டாசியம், தண்ணீர் என மூன்றுமே இருப்பதால் அவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம்.

 

சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும், அவர்கள் கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

 

கிர்ணிப் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.

 

நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை மிக விரைவாக பாதுகாத்து புகைப்பழக்கத்தினை நிறுத்தக் கூடிய அரிய குணம் கொண்ட பழமாகவும் இருக்கிறது கிர்ணி பழம்.


இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட கிர்ணி பழத்தை யாரும் மிஸ் பண்ணாதீங்க....

ஒரு உத்தரவாதி (பிணை தருபவர் விலகி கொள்ள முடியுமா

 *ஒரு உத்தரவாதி (பிணை தருபவர்) ஜாமீன் (SURETY)   கையெழுத்து போடுபவர்கள் தங்கள் பிணையை நீக்கி கொள்ள முடியுமா? 

தங்களின் உரிமைகள் என்ன?கடமைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.*            


இந்திய ஒப்பந்தச் சட்டம் (Indian Contract Act) - 1872

இந்த சட்டத்தின் 8 ஆம் பகுதியில்   (Indemnity and Guaranty) இழப்பு, எதிர்காப்பு மற்றும் உத்தரவாதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  


124 வது பிரிவு முதல் 147 வது பிரிவு வரையில்  SURETY பற்றி நாம் இந்த சட்டத்தில் விரிவாகக் காணலாம். 

SURETY கொடுப்பவரை உத்தரவாதம் கொடுப்பவர் என்பதால் உத்தரவாதி என்றும் தமிழில் கூறுகிறார்கள்.


SURETY LOAN என்றால்.


மற்ற லோன்கள் வங்கியில் வாங்கும்போது  கொடுப்பவர், வாங்குபவர் என்று இருவர் மட்டுமே இருப்பார்கள். அடமானக் கடன் என்றால், இவர்கள் இருவரைத் தவிர சொத்துக்கள் இருக்கும்.  


ஆனால், இந்த சூரிட்டி லோனில் கடன் கொடுத்தவர் (Creditor), கடனை பெற்றவர் (Principal Debtor) மற்றும் உத்தரவாதம் அளித்தவர் (SURETY)  என்று மூன்று நபர்கள் இருப்பார்கள். 


இவர்கள் மூன்று பேர்களில் பாதுகாப்பு இல்லாதவர் உத்தரவாதம் அளித்தவர்தான். 


ஆனால்  உத்திரவாதம் அளித்தவருக்கும் சட்டம் மூன்று வகையான உரிமைகளை அளித்திருக்கிறது.  அது என்ன என்று பார்ப்போம்.


1. கடன் பெற்றவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்பும் உரிமை.

வாங்கிய கடனை உரிய காலத்திற்குள் செலுத்தி அந்தக் கடனை உடனே தீர்க்க வேண்டும்! என்று கடன் வாங்கியவருக்கு சட்ட அறிவிப்பு அனுப்ப சூரிட்டி தந்தவருக்கு உரிமையுண்டு.


2. பற்று உரிமையை மாற்றிக் கொள்ளுதல்  கடன் வாங்கியவர் வங்கிக்கு கொடுக்க வேண்டிய தொகை முழுவதையும் வங்கியில் சூரிட்டி அளித்தவர் கட்டிவிட்டு, வங்கிக்கு இருந்த உரிமைகளை தனக்கு மாற்றிக் கொள்லலாம். 


இதனை ஆங்கிலத்தில் Subrogation (பற்று உரிமை மாற்று) என்று சொல்கிறார்கள்.


3. கடன் பெற்றவருக்குள்ள பத்திரங்கள்மீது உரிமை பற்று உரிமையை மாற்றிக் கொண்ட பிறகு, கடன் வாங்கியவர் வங்கியில் இந்தக் கடனுக்காக அடமானமாக வைத்திருந்த சொத்துப் பத்திரங்களின்மீது, 

கடன் கொடுத்திருந்த வங்கி எடுக்கின்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும் எடுக்கும் உரிமை பிரிவு 141-ன்படி   கடன் கொடுத்தவருக்கு வந்துவிடும்.   

               

4. இழப்பு எதிர்காப்பு உரிமை - Indemnity

கடன் வாங்கியவர் சார்பாக சூரிட்டி கொடுத்தவர் வங்கியில் செலுத்திய தொகை முழுமைக்கும் இழப்பு எதிர்காப்பு  உரிமை  பிரிவு 149-ன்படி  அவருக்கு உண்டு.


5. கடனாளியை கட்டாயப்படுத்தும் உரிமை

சூரிட்டி கொடுத்தவர், வங்கியின் நெருக்கடி காரணமாக, கடன் வாங்கியவர்   சார்பாக வங்கியில் பணம் செலுத்துவதற்கு முன்பாக  கடன் வாங்கியவரிடம்  தன்னை, கடனைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு கேட்கலாம்.


தனது சூரிட்டியை ஏற்று கடன் கொடுத்தவருக்கு எதிரான உத்தரவாதியின் உரிமைகள் 


1. வங்கியில் உள்ள, கடன் வாங்கியவரின் பத்திரங்களை கடனாளிக்கு பதிலாக உத்தரவாதி பணத்தை செலுத்தி கடனை தீர்த்திருந்தால்,  தன்வசம் ஒப்படைக்க கோரலாம்.


2.  கடன் வாங்கியவர் அவருக்குச் சொந்தமான சொத்துக்களின் பத்திரங்களை ஏற்கனவே தான் வாங்கிய கடனுக்கு  சூரிட்டியாக வங்கியிடம் கொடுத்திருப்பார். 


அந்த சொத்துக்களை முதலில் விற்று, அந்த தொகையில் வங்கிக்கு சேரவேண்டிய கடன் தொகையை முதலில்  எடுத்துக் கொள்ளச் சொல்லும் உரிமை உத்தரவாதிக்கு உள்ளது.


3. வங்கியாளர் பணம் கேட்டு தன்னிடம் வரும் போது, அவர்களிடம் கொடுத்த கடன் தொகையை வசூல் செய்ய கடன் வாங்கியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்க உத்தரவாதிக்கு உரிமை உண்டு.


இணை உத்தரவாதிகளுக்கு எதிராக உத்தரவாதியின் உரிமைகள்

கடன் வாங்கியவர் தன் கடனை தீர்க்காமல் போய்விடும் நேரத்தில், உத்தரவாதியை  அந்தக் கடனை தீர்க்கச் சொல்லி வங்கி நெருக்கடி கொடுக்கும். 


அந்த நேரத்தில் உத்தரவாதி இதர இணை உத்தரவாதிகளையும் அதில் பங்கு பெறுமாறு கேட்க உரிமை உண்டு. 


அப்போது உத்தரவாதியும் மற்றும் இதர இணை உத்தரவாதிகளும் இணைந்து ஒவ்வொருவரும்  சமமாக வங்கிக்கு செலுத்தப்படுகின்ற தொகையில் பங்கு பெற வேண்டும். 


இவ்வாறாக,  அணைத்து  உத்தரவாதிகளும் சேர்ந்து கடன் வாங்கியவரின் கடன் முழுவதையும் வங்கியில் தீர்த்த பிறகு, வங்கியின் வசம் இருக்கின்ற கடன் வாங்கியவரது சொத்துப் பத்திரங்களில் அவர்கள் அனைவருக்கும் உரிமை வந்துவிடும். 


அவர்கள் ஒவ்வொருவரும் அந்தச் சொத்தில் அவரவர்களுக்குரிய  பங்கினை பெற்றுக் கொள்ளலாம்.


உத்தரவாதத்திலிருந்து வெளியேறுதல் 

கொடுத்த உத்தரவாதத்தை திரும்பப் பெற முடியுமா?


இந்திய ஒப்பந்தச் சட்டம் - 130,131 மற்றும் 133 ஆகிய பிரிவுகளில், உத்தரவாதி தான் கொடுத்த உத்தரவாதத்திலிருந்து எந்தெந்த சூழ்நிலையில் வெளியேறலாம்? என்பதைக் கூறுகிறது.


பிரிவு - 130 - உத்தரவாதத்தை திரும்ப பெறும் அறிவிப்பு ஒன்றினை வங்கிக்கு எழுத்து மூலமாக கொடுப்பதன் மூலம்


பிரிவு - 131- உத்தரவாதி n இறந்து போனால்.


பிரிவு - 133- ஒப்பந்த விதிமுறைகளில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்படுத்தப்படும் போது.


என்றென்றும் மக்கள் பணியில்

இரா.கணேசன்

அருப்புக்கோட்டை

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம் 

பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013

 *#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...